இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 விமானிகளும் விரைவில் நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா என்ற இடத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் - சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 - நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒரு விமானி பலியானார்.
இன்று காலை இரு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டபோது, விமானம் விபத்துக்குள்ளானதாகவும், ஒரு விமானத்திலிருந்து இரண்டு விமானிகள் வெளியே குதித்து உயிர்பிழைத்ததாகவும் மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் சம்பவ இடத்தில் இருந்து கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகோய் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய விமானிகள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான துரதிருஷ்டமான செய்தி மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உயிர்த்தியாகம் செய்த விமானிக்கு எனது வணக்கங்கள். நாங்களும், எங்களது பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்துக்காக இருக்கிறோம். இந்த விபத்தில் காயமடைந்துள்ள 2 விமானிகள் விரைவில் நலம் பெற நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தமிழக வாழ்வுரிமைக் கட்சி?

லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்மூட்டி - மோகன்லாலின் பேட்ரியாட்!

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP

”மன்னிப்பு கூறியபின் விவாதம் வேண்டாம்” சர்ச்சைப் பேச்சுக்களுக்கு EPS பதில்!
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

