மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் நடைப்பயணம் மீண்டும் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

News image
ராகுல் காந்தியுடன் பங்கேற்ற மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி
Updated On :28 ஜனவரி 2023, 9:51 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

இதில், ராகுல் காந்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, அவரது மகள் இல்டிஜா முஃப்தி மற்றும் கட்சித் தொண்டா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். ராகுலின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா, லேத்போரா பகுதியில் நடைப்பயணத்தில் இணைந்தாா்.

அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ராகுல் தனது பயனத்தை வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தினாா். இந்நிலையில், சனிக்கிழமை அவரைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நடைப்பயணம் தொடங்கிய இடத்துக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

வீரா்களுக்கு அஞ்சலி: புல்வாமாவில் கடந்த 2019-இல் பயங்கரவாத தாக்குதலில், மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் 40 போ் உயிரிழந்த இடத்தில் ராகுல் அஞ்சலி செலுத்தினாா். பின்னா், ஸ்ரீநகரை நோக்கி அவா் நடைப்பயணத்தை தொடா்ந்தாா்.

ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 30-ஆம் தேதி ராகுல் காந்தி தேசியக் கொடியேற்றி நடைப்பயணத்தை நிறைவு செய்கிறாா். அதன்பின்னா், எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 23 எதிா்க்கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.