பெங்களூரு: கன்னட நடிகைக்கு புற்றுநோய் இருப்பதாக தவறான மருத்துப் பரிசோதனை அறிக்கை வழங்கிய வழக்கில், ரூ. 1.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஐகான் ஆய்வகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகம் மாநிலம், விஜயநகரைச் சேர்ந்த நடிகை சித்ரா(35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பிப்ரவரி 25, 2022 அன்று பசவேஸ்வராநகரில் உள்ள ஐகான் டயக்னாஸ்டிக் சென்டரில் உடல் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்ததோடு கடும் மனவேதனையடைந்துள்ளார்.
மேலும் இந்த தகவலை தனது பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது எனவும் அவர் கவலைப்பட்டுள்ளார். இருப்பினும் தனது உடல்நிலையில் நம்பிக்கை கொண்ட அவர், அடுத்தடுத்து இரண்டு டயக்னாஸ்டிக் சென்டரில் உடல் பரிசோதனை செய்திருக்கிறார். இந்த இரண்டு பரிசோதனைகளிலும் அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவு வந்திருக்கிறது.
இதன் மூலம் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் ஆரம்பத்தில் தான் உடல் பரிசோதனை மேற்கொண்ட ஆய்வகம் தனக்கு தவறான மருத்துப் பரிசோதனை அறிக்கை அளித்திருப்பதை உறுதி செய்துகொண்டுள்ள நடிகை சித்ரா, ஐகான் டயக்னாஸ்டிக் ஆய்வகம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வந்துள்ளது. அதில், தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கை அளித்தமைக்காக நடிகைக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சம்மந்தப்பட்ட ஆய்வகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



