உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலைச் சுற்றி விடியோக்கள் எடுக்கக் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சமீபத்தில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட விடியோ வைரலான நிலையில், பத்ரி-கேதார்நாத் கோயில் கமிட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கோயில் வளாகத்தில் விடியோ எடுத்த நபர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாக கமிட்டி சார்பில் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், சார்தாம் கோயிலில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோயிலில் புனிதத்தன்மை கெடும் வகையில் மக்கள் புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்து வருகின்றன. இதனால் மக்களின் மத உணர்வுகளை தூண்டுவதாக உள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவகையில் பக்தர்கள் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும். மேலும் கோயில் வளாகத்தில் வைத்து, விடியோ, ஷாட்ஸ், இண்டா லீல்ஸ் போன்ற விடியோக்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோயில் கமிட்டி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



