புதுதில்லி: அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டிருக்கும் ஒப்பந்தங்களை வழக்குரைஞர் பிரசாந் பூஷண் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புக்காக, அதிக செலவு கொண்ட ட்ரோன் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், குஜராத்தில் ஒரு சிப் அசெம்பிளிங் ஆலையை அமைக்கும் ஒரு அமெரிக்க தனியார் நிறுவனத்தின் செலவில் 70 சதவிகித மானியம் வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார் மோடி.
2.75 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் உருவாக்கப்படும் ஆலையில் வெறும் 0.825 பில்லியன் டாலர் மட்டும் முதலீடு செய்த மைக்ரான் 100 சதவிகித உரிமம் பெற்றிருக்கும். இதற்கு பெயர்தான் வளர்ச்சியா? என்று மோடிக்கு பிரசாந்த் பூஷண் கேள்வி எழுப்பியுள்ளார்.