காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்து நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடைபெறவுள்ள மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தற்போது நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை நிலவும் மணிப்பூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
இன்று ராஜஸ்தான் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளைய தினம்(ஜூலை 7, வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!