எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மூச்சுக்குழாய் அழற்சி மருந்தை திரும்பப் பெறும் சிப்லா

அமெரிக்க சந்தைகளிலிருந்து மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கான 'அல்புடரோல் சல்ஃபேட்' என்ற உள்ளிழுக்கும் மருந்தின் 6 தொகுப்புகளை தானாக திரும்பப் பெறுவதாக இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி

News image
Updated On :9 ஜூலை 2023, 9:36 am IST

அமெரிக்க சந்தைகளிலிருந்து மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கான 'அல்புடரோல் சல்ஃபேட்' என்ற உள்ளிழுக்கும் மருந்தின் 6 தொகுப்புகளை தானாக திரும்பப் பெறுவதாக இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் சிப்லா நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிலா-யுஎஸ்ஏ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கன்டெய்னர் குறைபாடு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவலை சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்ட, மூச்சுவிடுவதில் சிரமம், இருமல் போன்ற பிரச்னைகளுக்கு காரணமாக உள்ள மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'அல்புடரோல் சல்ஃபேட்' என்ற 90 மில்லி கிராம் அளவுடைய உள்ளிழுக்கும் மருந்து கருவியின் வால்வு பகுதியில் கசிவு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அதே வால்வுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு அமெரிக்க சந்தையில் விநியோகிக்கப்பட்ட 6 தொகுப்பு 'அல்புடரோல் சல்ஃபேட்' மருந்துகளைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தினால் நோயாளிகளுக்கு எந்தவித தீவிர பாதிப்பும் இதுவரை பதிவாகவில்லை. எனவே, மருந்துகள் திரும்பப் பெறப்படுவதற்கு, அதுபோன்ற காரணமில்லை.

இந்த மருந்து திரும்பப் பெறப்படுவது குறித்து மருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. திரும்பப் பெறப்படும் அனைத்து மருந்துகளுக்கும் மாற்று வழங்கப்படும். எனவே, குறிப்பிட்ட இந்த 6 தொகுப்பு மருந்துகளை பயன்படுத்துவதை விநியோகஸ்தர்களும், வாடிக்கையாளர்களும் கைவிடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.