ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை: பாஜக

மேற்கு வங்கத்தில் கடந்த 8ஆம் தேதி கிராம உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 73,887 இடங்களுக்கான தேர்தலில் 2.06 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனர். 

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜூலை 2023, 12:46 pm

DIN


மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாஜக தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் கடந்த 8ஆம் தேதி கிராம உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 73,887 இடங்களுக்கான தேர்தலில் 2.06 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனர். 

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது. தேர்தலையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 12 போ் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை என பாகஜ மாநில பொதுச்செயலாளர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, நடந்து முடிந்த கிராம உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு (பாஜக) நம்பிக்கையில்லை. தேர்தலின்போது எங்கும் வன்முறை நிலவியது. மம்தா அரசின் அதிகாரிகள் கட்டாயத்தின்பேரில் வாக்குப்பதிவை நிறைவு செய்தனர். மத்திய அரசுப் படைகளை மாநில அரசு உள்ளே வர விடவில்லை. பல்வேறு வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. பல மையங்களில் ஒற்றை இலக்க வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது. மேற்கு வங்க மக்கள் திரிணமூல் காங்கிரஸை தூக்கி எரிய சாலைக்கு வந்துவிட்டனர். அதில்தான் எங்கள் வெற்றி பதிவாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.