வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சந்திராயன் - 3 விஞ்ஞானிகள் திருப்பதியில் தரிசனம்!

சந்திரயான்-3 விண்கலம், சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2023, 9:31 am

DIN

சந்திராயன் 3 விண்கலம் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை திருப்பதியில் தரிசனம் செய்தனர்.

இஸ்ரோ சாா்பில் ரூ.615 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம், சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இதற்கான ஆயத்த பணிகள் நிறைவடைந்த நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான 25.30 மணிநேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திராயன் 3 மாதிரியை வைத்து சிறப்பு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.