24-வது கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு லடாக் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமைத் தளபதி ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனால் 1999-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இதுவே, கார்கில் போர் என்றழைக்கப்படுகிறது.
இதில் பாகிஸ்தானை இந்திய ராணுவம் வீழ்த்தியதையொட்டி ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 24வது கார்கில் போர் வெற்றி நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி லடாக் எல்லைப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.