தில்லி: மாநிலங்களவையில் ஆளுங்கட்சியினர் மோடி, மோடி என்றும், எதிர்க்கட்சியினர் இந்தியா, இந்தியா என்றும் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாள்களாக மணிப்பூர் கலவரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், 6-வது நாளாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, மாநிலங்களவையில் வெளியுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில் ஆளும்கட்சியினர் மோடி, மோடி என்று முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் இந்தியா, இந்தியா என்று பதில் முழக்கமிட்டனர்.
அவையில் இரு தரப்பினரும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களை தலைவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஊக்கமளிக்கும் மருந்தே விருது

தேர்தல் விதிமுறை அமல்: வேலூரில் தலைவர்களின் படங்கள் அகற்றம்!
பூவன்பழம் புட்டு
கேழ்வரகு லட்டு
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

