திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலக இதுதான் காரணம்: டி.கே.சிவகுமார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகி அமைதியாக இருக்க முடிவெடுத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.

News image
Updated On :3 ஜூன் 2023, 3:48 pm IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகி அமைதியாக இருக்க முடிவெடுத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தொகுதிக்கு வாக்காளர்களை சந்திக்க சென்ற அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் என்னை கர்நாடகத்தின் முதல்வராக்க அதிக வாக்குகளை எனக்கு அளித்தீர்கள். ஆனால், என்ன செய்வது. கர்நாடக முதல்வர் பதவிக்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார்கள். மூத்த தலைவர்களின் அந்த  அறிவுரையை ஏற்று நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், நான் அமைதியாக இருக்க நேர்ந்தது. ஆனால், உங்களிடம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை கர்நாடகத்தின் முதல்வராக பார்க்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை. அமைதியாக இருப்போம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.