பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

உடல்களை எடுத்துச்செல்லும் செலவை அரசே ஏற்கும்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல உதவும் வகையில் போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:34 am IST

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல உதவும் வகையில் போக்குவரத்து செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், உடல்களை எடுத்துச்செல்லும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். சாலைப்பயணத்தில் உடலை எடுத்துச்சென்றால், அரசு சார்பில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மார்க்கமாக எடுத்துச்செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அடையாளம் காண முடியாத உடல்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். 

3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.