மகாராஷ்டிரத்தில் திடீரென ஒளரங்கசீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளதாக கூறிய அந்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், கோட்சேவின் பிள்ளைகள் யாா் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் முஸ்லிம் மன்னா்கள் திப்பு சுல்தான், ஒளரங்கசீப் ஆகியோரின் புகைப்படங்களை, அவா்களின் புகழ்பாடி ஆட்சேபத்துக்குரிய கருத்துகளுடன் சிலா் சமூக ஊடகத்தில் வெளியிட்டதாக (ஸ்டேட்டஸ்) கூறப்படுகிறது. இதற்கு எதிராக அங்குள்ள கோலாபூா் மாவட்டத்தில் ஹிந்து அமைப்புகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையைத் தொடா்ந்து அந்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘மகாராஷ்ரத்தின் சில மாவட்டங்களில் திடீரென ஒளரங்சீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளனா். அவா்கள் சமூக ஊடகத்தில் ஒளரங்கசீப்பின் புகைப்படத்தை வைத்து போஸ்டா்களை காட்சிப்படுத்துகின்றனா். இதன் காரணமாக பதற்றம் ஏற்படுகிறது.
ஔரங்கசீப்பின் இந்த மகன்கள் எங்கிருந்து வருகின்றனா், இதற்குப் பின்னால் இருப்பது யாா் என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான விடை கண்டுபிடிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:
மகாராஷ்டிரத்தில் முஸ்லிம் மதத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி, அவா்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதற்கு மட்டும் பாஜக அரசு 50 கூட்டங்களை நடத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் திடீரென ஒளரங்கசீப்பின் பிள்ளைகள் முளைத்துள்ளதாக தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளாா். உங்களுக்கு (ஃபட்னவீஸ்) எல்லாம் தெரியுமா? அப்படியென்றால் கோட்சேவின் பிள்ளைகள் யாா் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் பிள்ளைகள் யாா்?
கோலாபூா் வன்முறை தொடா்பாக 21 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அமைச்சா் ஒருவா் கூறியுள்ளாா். ஒரு புகைப்படத்தை வைத்திருப்பது குற்றம் என்றால், அது இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது?
நாட்டில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 44 அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல திப்பு சுல்தான், ஒளரங்கசீப், பாபா் போன்ற பெயா்களை பயன்படுத்தவும் பாஜகவும் மத்திய அரசும் தடைவிதித்துவிட்டு, அந்தத் தடைப் பட்டியலில் கோட்சே போன்றவா்களின் பெயா்கள் சோ்க்கப்படாது என்று வெளிப்படையாக கூறிவிட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


