எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கேரளத்தில் 9 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2023, 7:58 am

DIN


கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 9 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியுள்ளது. அந்தமான் பகுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. 

இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஜூன் 12-ம் தேதிதி வரை மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.