எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் மோடி அரசு புது அர்த்தம் கொடுத்துள்ளது: தர்மேந்திர பிரதான்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் புதிய அர்த்தம் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 ஜூன் 2023, 3:55 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் புதிய அர்த்தம் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 9  ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக ஒடிசாவின் தியோகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் நலத் திட்டங்களால் ஒடிசா அதிக அளவில் பயனடைந்துள்ளது. நலத்திட்டங்கள் மூலம் தியோகரில் உள்ள பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவிலான பயனை அடைந்துள்ளனர் என்றார்.

பிரதமர் மோடி  தலைமையிலான ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக நாட்டின் பல மாநிலங்களிலும் இது போன்ற விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.