சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
கட்சியின் வளர்ச்சிக்காகத் தாங்கள் இருவரும் மேற்கொண்ட கடின உழைப்பும், தங்களது நாடாளுமன்றச் செயல்பாடுகளே தங்களை இப்பதவி உயர்வுக்கு மிகவும் தகுதியுடைவர்களாக ஆக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.