மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த பை பறிமுதல்: 8 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். 
மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த பை பறிமுதல்: 8 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். 

இதுதொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகையில், 

பிஷ்ணுபூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டோம். அப்போது அதிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த  பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பையைக் கொண்டு வருகின்றனர் என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com