துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

குஜராத்தில் கரையைக் கடக்கும் அதிதீவிர புயல்: தயார் நிலையில் ராணுவம்

குஜராத்தில் இன்று மாலை ‘பிபா்ஜாய்’ புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2023, 5:14 am

DIN

குஜராத்தில் இன்று மாலை ‘பிபா்ஜாய்’ புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

அரபிக் கடலில் உருவான ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணிக்கு கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 50,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா-கட்ச் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

தேவபூமி துவாரகா, ஜாம்நகா், ஜுனாகத், போா்பந்தா், ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை தொடர்கிறது.

புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசும் என்றும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, முப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.