குஜராத்தில் இன்று மாலை ‘பிபா்ஜாய்’ புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
அரபிக் கடலில் உருவான ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணிக்கு கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 50,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா-கட்ச் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.
தேவபூமி துவாரகா, ஜாம்நகா், ஜுனாகத், போா்பந்தா், ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை தொடர்கிறது.
புயல் கரையை கடக்கும்போது 145 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசும் என்றும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, முப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: எண்ணெய், பெயிண்ட் பங்குகள் சரிவுடன் நிறைவு!

நான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும்: மே.இ.தீவுகள் கேப்டன்
ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? டிரம்ப் அதிர்ச்சி பதில்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

