
அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத் கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலில் உருவான அதி தீவிர புயலான பிபர்ஜாய் சௌராஷ்டிரா கடற்கரைப் பகுதியை நோக்கி நெருங்கி வருகிறது. காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் உள்ளது. பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் செயல் தொடங்கிவிட்டது. புயல் கரையை கடக்க மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.