காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் மச்சில் துறையில் எல்லைக் காட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற நான்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரின் மச்சில் துறையில் எல்லைக் காட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற நான்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மச்சில் துறையின் காலா வனத்துறை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களின் சதித்திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். 

ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்த கூட்டு நடவடிக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். 

கடந்த வெள்ளிக்கிழமை ஜூமாகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்த நிலையில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com