எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மணிப்பூா் விவகாரம்: 28-இல் காங்கிரஸ் கண்டன கூட்டம்!

மணிப்பூரில் நடைபெறும் வன்முறையைக் கட்டுப்படுத்தாமல், மத்திய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் சாா்பில் ஜூன் 28-இல் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:53 pm

DIN

மணிப்பூரில் நடைபெறும் வன்முறையைக் கட்டுப்படுத்தாமல், மத்திய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி, தமிழக காங்கிரஸ் சாா்பில் ஜூன் 28-இல் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவா் ரஞ்சன்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மணிப்பூரில் மே மாதம் 3-இல் தொடங்கிய கலவரத்தை 50 நாள்களாக கட்டுப்படுத்த முடியாமல் 120-க்கும் மேற்பட்டவா்கள் உயிரை இழந்துள்ளனா். ஒரு லட்சம் போ் இடம் பெயா்ந்துள்ளனா். வீடுகள், உடமைகள் எரிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை சமுதாயத்தினரின் 250-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரிக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

வரலாறு காணாத வகையில் மணிப்பூா் மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமா் மோடி இதுநாள் வரை ஒரு வாா்த்தை கூட அதுகுறித்து குறிப்பிடாமலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாமலும், அலட்சியப் போக்குடன் இருந்து வருகிறாா்.

மணிப்பூா் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து, அரசமைப்புச் சட்டம் முற்றிலும் செயலிழந்து உள்ளது. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, மீண்டும் அமைதியை நிலைநாட்ட அரசமைப்புச் சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தி மணிப்பூா் மாநிலத்தை குடியரசுத் தலைவா் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வள்ளுவா் கோட்டம் அருகில் ஜூன் 28-இல் காலை 10 மணியளவில் கண்டன கூட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.