தில்லியில் பள்ளி முதல்வர்களை சந்திக்கிறார் மத்திய அமைச்சர்!

தில்லியில் உள்ள 25 முக்கிய பொதுப் பள்ளிகளின் முதல்வர்களை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று சந்திக்கிறார். 
தில்லியில் பள்ளி முதல்வர்களை சந்திக்கிறார் மத்திய அமைச்சர்!
Updated on
1 min read

தில்லியில் உள்ள 25 முக்கிய பொதுப் பள்ளிகளின் முதல்வர்களை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று சந்திக்கிறார். 

இந்த சந்திப்பு பிற்பகல் 12.30 மணியளவில் இந்தியா வாழ்விட மையத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் ஒன்பது ஆண்டுகளில் மோடி அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து முதல்வர்கள் மற்றும் அவரது துணைவர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்று பாஜக தலைவர் நீல்காந்த் பக்ஷி தெரிவித்தார். 

மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்புகொண்டு, கட்சித் தலைமையிலான அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து தெரிவிக்க பாஜக நாடு முழுவதும் ஒரு மாதக்கால பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com