மேற்குவங்கத்தில் மோசமான வானிலை காரணமாக முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஜல்பைகுரியில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பின்னர் பஹ்டொக்ரா விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அங்கு மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக பைகுந்தபூர் வனப்பகுதியில் சிவோக் ராணுவ தளத்தில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தது.
இதையடுத்து மம்தா பானர்ஜி சாலை மார்க்கமாக பஹ்டொக்ரா விமான நிலையத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து விமானத்தில் கொல்கத்தா சென்றார்.