
நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,549 ஆகக் குறைந்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று புதிதாக 47 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4,49,94,144 உள்ளது.
இன்று காலை 8மணி அறிக்கையின்படி கரோனா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,31,905 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 98.81 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 1.18 சதவீதம் பேர் கரோனா பாதித்து இறந்துள்ளனர். 4,44,60,690 பேர் கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.