மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சர்வாதிகார முறையைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Shri @RahulGandhiâs convoy in Manipur has been stopped by the police near Bishnupur.
â Mallikarjun Kharge (@kharge) June 29, 2023
He is going there to meet the people suffering in relief camps and to provide a healing touch in the strife-torn state.
PM Modi has not bothered to break his silence on Manipur. He has leftâ¦
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூரின் பிஷ்னுபூர் பகுதிக்கு அருகில் ராகுல் காந்தியின் வாகனம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூற சென்றார் ராகுல் காந்தி. மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மௌனம் சாதிப்பது குறித்து பிரதமருக்கு கவலையில்லை. அவர் மணிப்பூர் மாநிலத்தின் நிலைமையை அப்படியே விட்டுவிட்டார். மணிப்பூர் மக்களுக்கு ஆறுதலளிக்கச் சென்ற ராகுல் காந்தியை தங்களது சர்வாதிகர முறையைப் பயன்படுத்தி இந்த இரட்டை என்ஜின் அரசு தடுக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் விதிமுறைகள் சிதறடிக்கப்படுகின்றன. மணிப்பூருக்கு தேவை அமைதியே தவிர மோதல் அல்ல எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government


