குஜராத்: ஜேசிபி மூலம் ஆற்றைக் கடக்கும் மக்கள்!

குஜராத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆபத்தான முறையில் ஜேசிபி மூலம் மக்கள் கடந்து செல்லும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
குஜராத்: ஜேசிபி மூலம் ஆற்றைக் கடக்கும் மக்கள்!


குஜராத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆபத்தான முறையில் ஜேசிபி மூலம் மக்கள் கடந்து செல்லும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டுச்செல்லும் வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலம் குச் பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் மக்கள் கடக்கின்றனர். ஆபத்தை உணராமல் ஜேசிபி இயந்திரத்தின் முனைப் பகுதியில் மக்கள் நின்றுகொண்டு மறுகரைக்குச் செல்கின்றனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com