உத்தரப் பிரதேசத்தில் ஷாருக்கான் பெயருடைய ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை சந்தையில் 300 கிலோ எடையுடைய ஆடு ரூ.6 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவிலுள்ள ஆடுகள் விற்பனை சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள், மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இந்த சந்தையில் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தையில் ஷாருக்கான் எனப் பெயரிடப்பட்ட 300 கிலோ எடையுடைய அஜ்மீரி இன ஆடு ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது. அந்த ஆட்டின் உரிமையாளரான இர்ஃபான் ஆக்ஹா, தான் வளர்க்கும் ஆடுகளுக்கு ஹிந்தி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இட்டு வளர்த்துள்ளார்.
பதான், சுல்தான், ராஜ்குமார் போன்ற பெயருடைய ஆடுகளையும் வளர்த்து வருவதாக உரிமையாளர் குறிப்பிட்டார்.
மேலும், ஷாருக்கான் எனும் பெயருடைய மற்றொரு ஆடு, ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த இரு ஆடுகளையும் மலிஹாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கியுள்ளார்.