டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசியல் நோக்கத்துக்காக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது: பினராயி விஜயன்

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு பின்னணியில் அவர்களது அரசியல் ஆதாய நோக்கம் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :30 ஜூன் 2023, 1:00 pm

DIN

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு பின்னணியில் அவர்களது அரசியல் ஆதாய நோக்கம் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் எண்ணத்தை கைவிடும் படி வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் இந்த பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முடிவு நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ,  ‘ஒரு நாடு, ஒரு கலாசாரம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தும் முடிவாகவே பார்க்கப்படுகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசும், சட்டக் குழுவும் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த பொது சிவில் சட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.