3 மாநில பேரவைத் தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலை

திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
3 மாநில பேரவைத் தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலை


திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள்  எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. மேகாலயம் மற்றும் நாகாலாந்திலும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் தலா ஒரு தொகுதி தவிா்த்து 59 இடங்களில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முன்னிலை நிலவரம்: 
திரிபுரா:
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 37 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் இருந்து வருகிறது.  

சிபிஎம் கூட்டணி 4 இடங்களிலும், திமோக 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

நாகாலாந்த்: 

60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் பாஜக 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், நாமமு 9 தொகுதிகளிலும், பிற 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

மேகாலயம்: 

60 தொகுதிகளை கொண்ட மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிளிலும், திரிணாமுல் 9 தொகுதிகளிலும், பிற 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com