திரிபுரா, மேகாலயம், நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. மேகாலயம் மற்றும் நாகாலாந்திலும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் தலா ஒரு தொகுதி தவிா்த்து 59 இடங்களில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னிலை நிலவரம்:
திரிபுரா:
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 37 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் இருந்து வருகிறது.
சிபிஎம் கூட்டணி 4 இடங்களிலும், திமோக 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
நாகாலாந்த்:
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் பாஜக 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், நாமமு 9 தொகுதிகளிலும், பிற 12 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
மேகாலயம்:
60 தொகுதிகளை கொண்ட மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிளிலும், திரிணாமுல் 9 தொகுதிகளிலும், பிற 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.