நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிகார்: குடிபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் கைது 

பிகார் குடிபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :3 மார்ச் 2023, 5:23 pm IST

பிகார் குடிபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிகாரி மாநிலம்,  பஷ்சிம் சம்பரன் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அசோக் யாதவ். இவர் இன்று காலை பள்ளிக்கு குடிபோதையில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொது சுகாதார குழு தலைவரும், பஞ்சாயத்து குழு உறுப்பினருமான அர்த்ராஜ் யாதவ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரைத்தொடர்ந்து கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்தனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வி அலுவலர் கூறியதாவது, இதுபோன்ற நடத்தை பொறுத்துக்கொள்ளப்படாது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிகார் மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.