தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

இடையூறுகளைத் தாண்டி நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றம் பல சவாலன தருணங்களை சந்தித்துள்ளதாகவும், அதனை உரிய முறையில் கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்.

News image
Updated On :5 மார்ச் 2023, 1:52 pm IST

உச்சநீதிமன்றம் பல சவாலன தருணங்களை சந்தித்துள்ளதாகவும், அதனை உரிய முறையில் கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியுள்ளார்.


சிறப்பான ஜனநாயகம் அமைய சுதந்திரமான நீதித் துறை என்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். ’சுதந்திரமான நீதித் துறை: சிறப்பான ஜனநாயகத்தின் தேவை’ என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்தக் கருத்தரங்கில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியதாவது: உச்சநீதிமன்றம் இன்று பல்வேறு விதமான சவால்களை சந்திக்கிறது. இந்த சவால்களை சமாளிக்க சுதந்திரமான மற்றும் வலிமையான நீதித்துறை என்பது அவசியம். நாம் அனைத்து விதமான அழுத்தங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த விதமான இடையூறு ஏற்பட்டாலும் அதனையும் திறம்பட எதிர்கொள்ள வேண்டும். சில நேரங்களில் நிர்வாகிகளின் குறுக்கீடுகள் ஏற்படும். ஆனால், அவற்றையெல்லாம் திறம்பட கையாண்டு நீதித்துறையின் சுதந்திரத்தன்மை காக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தன்மை என்பது நீதிமன்ற செயல்பாடுகளில் நேர்மையை உறுதிப்படுத்துவது, பாரபட்சமின்மை, வழக்குகளை சுதந்திரமாக விசாரிப்பது ஆகியனவாகும். மாவட்ட நீதித் துறை யாருடைய கட்டுப்பாட்டின் கீழும் இல்லை. அவர்களது பணி நியமனங்கள், பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் போன்றன உயர்நீதிமன்றங்களின் பரிந்துரையின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

நீதித்துறையின் செயல்பாடுகளில் எந்த ஒரு புறக்காரணிகளின் குறுக்கீடும் இருக்கக் கூடாது. அதனை, அரசியலைமைப்பு சட்டவிதிகள் உறுதிப்படுத்துகின்றன. நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை உறுதிப்படுத்த நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்குவதில் முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டும். எந்த ஒரு அமைப்பும் நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்தக்  கூடாது. நீதித்துறையின் தோள்கள் புறக்காரணிகளால் எந்த மாதிரியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் அதனைத் தாங்கும் வலிமை படைத்தாக இருக்க வேண்டும் என்றார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.