பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் மனைவியுமான ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மொத்தம் 16 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிகாரில் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, வேலைக்காக அணுகியவா்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு, அவா்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரொக்கப்பணமாக கொடுத்தும் லாலுவின் குடும்பத்தினர் நிலங்களை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்களின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தகவலின்படி, ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கில் சில விவரங்களை திரட்டும் பொருட்டு ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | லாலு பிரசாத் மனைவி, மகள்கள் வீடுகளில் சிபிஐ சோதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேந்தமங்கலம், ராசிபுரத்தில் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா

மாநில கபடி போட்டி: சேலம் அணிக்கு சுழற்கோப்பை

விலை குறைந்ததால் புதினா தோட்டங்கள் அழிப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

