தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக அமித் சர்மா பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அமித் சர்மா திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக அமித் சர்மா பதவியேற்பு!
Published on
Updated on
1 min read

தில்லி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அமித் சர்மா திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

நீதிபதி அமித் சர்மாவுக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

முன்னதாக பிப்ரவரி 15-ம் தேதியன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி அமித் ஷர்மாவை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பரிந்துரைத்து, மார்ச் 3-ம் தேதி மத்திய அரசு அவரது நியமனத்தை அறிவித்தது. 

உயர்நீதிமன்றத்தில் தற்போது 10 பெண் நீதிபதிகள் உள்பட 45 நீதிபதிகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com