தெலங்கானா முதல்வரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கே.கவிதா
கே.கவிதா

தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மேலவை உறுப்பினருமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான அமித் அரோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கவிதாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக வியாழக்கிழமை(மார்ச் 9) நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க கோரி கவிதாவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்தாண்டு சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com