
அசாமில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 3:59 மணிக்கு கம்ரூப் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கூத்தாநல்லூர்: நகராட்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
பிப்ரவரி 28 அன்று, குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3:21 மணியளவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.