அசாமில் மிதமான நிலநடுக்கம்!

அசாமில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக  தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அசாமில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக  தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 3.2  ஆகப் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 3:59 மணிக்கு கம்ரூப் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக  தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று, குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3:21 மணியளவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com