அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி!

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை இந்திய ராணுவம் வியாழக்கிழமை நிறுவியுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 8:45 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை இந்திய ராணுவம் வியாழக்கிழமை நிறுவியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பள்ளத்தாக்குப் பகுதி, கடந்த தசாப்தத்துக்கு முன்பு பயங்கரவாதத்தின் மையப் பகுதியாக இருந்தது. தற்போது, பயங்கரவாத செயல்பாடுகள் அங்கிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள கிஷ்த்வாா் மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி கடந்த ஆண்டு ஜூலையில் நிறுவப்பட்டது.

இந்நிலையில், 2-ஆவது முறையாக அதே போன்ற தேசியக் கொடியை தோடா மாவட்டத்தில் இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. தோடா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவத்தின் டெல்டா படைப் பிரிவின் தலைவா் அஜய் குமாா் தேசிய கொடியை ஏற்றினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த செனாப் பள்ளத்தாக்கு ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தேசிய கொடி விளங்கும். தோடாவில் முதல் முறையாக நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர தேசிய கொடி ராணுவத்துக்கு மட்டுமல்லாமல், மாவட்ட மக்களுக்கும் பெருமைக்குரியதாக அமையும்’ என்றாா்.

இந்நிகழ்வில் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.