தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 400ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :14 மார்ச் 2023, 6:28 am

DIN

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 400ஐத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

இன்று காலை நிலவரப்படி நாட்டில் கரோனா பாதிப்பு 402 ஆகப் பதிவாகியுள்ளது. அதேசமயம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,903 ஆக உயர்ந்துள்ளது. 

கர்நாடகம் மற்றும் ஹிமாசலில் தலா ஒருவர் என இரண்டு பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,30,784 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,46,91,338 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் நோயிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,41,56,651 ஆகவும், 98.80 சதவீதமாக உள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 6  கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.