ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
ரூ.70,584 கோடி மதிப்பிலான முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்


உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மிகப் பெரிய கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.70,584 கோடி மதிப்பிலான முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை இதற்கான ஒப்புதலை அளித்தது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ராணுவத்துக்கான தேவையின் அடிப்படையில் இந்த ஒப்புதலை டிஏசி அளித்துள்ளது. இந்த மூலம் ரூ.70,584 கோடி மதிப்பிலான அனைத்து தளவாடங்களும் முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட்டவையாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த ஒப்புதல் மூலமாக, 2022-23-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பாதுகாப்பு தளவாட மூலதன கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2,71,538 கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 98.9 சதவீதம் இந்திய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்தனா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த உள்நாட்டு தளவாட கொள்முதல் நடவடிக்கை ‘தற்சாா்பு இந்தியா’ இலக்கை நோக்கி இந்திய நிறுவனங்கள் முன்னேறுவதை ஊக்குவிக்கும் என்பதோடு, பெருமளவில் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியா சாா்ந்திருக்கும் நிலையையும் குறைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...