தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது மற்றொரு பொய்யான வழக்கினை மத்திய விசாரணை அமைப்புகள் பதிந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளின் இந்த பொய்யான வழக்குகளினால் மணீஷ் சிசோடியாவால் சிறையிலிருந்து வெளிவர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறியதாவது: தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது மத்திய விசாரணை அமைப்பினால் மற்றொரு பொய்யான வழக்குப் பதியப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த இடத்தில் இருக்கும் பிரதமரை மணீஷ் சிசோடியா உளவு பார்த்ததாகவும், விசாரணை அமைப்புகளுக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உளவு வேலை கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் மணீஷ் சிசோடியா சிறையிலிருந்து வெளிவரக் கூடாது என விசாரணை அமைப்புகள் செய்யும் வேலையாகும். இந்தியாவின் பகுதிகளை கைப்பற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. ஆனால், விசாரணை அமைப்புகள் மணீஷ் சிசோடியா மீது பொய்யான வழக்குகளை பதிந்து வருகிறது என்றார்.
தில்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

