ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணீஷ் சிசோடியா சிறையிலிருந்து வெளிவருவதை விரும்பாத விசாரணை அமைப்புகள்: ஆம் ஆத்மி

 தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது மற்றொரு பொய்யான வழக்கினை மத்திய விசாரணை அமைப்புகள் பதிந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2023, 11:55 am

DIN

தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது மற்றொரு பொய்யான வழக்கினை மத்திய விசாரணை அமைப்புகள் பதிந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.


மத்திய விசாரணை அமைப்புகளின் இந்த பொய்யான வழக்குகளினால் மணீஷ் சிசோடியாவால் சிறையிலிருந்து வெளிவர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறியதாவது: தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது மத்திய விசாரணை அமைப்பினால் மற்றொரு பொய்யான வழக்குப் பதியப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த இடத்தில் இருக்கும் பிரதமரை மணீஷ் சிசோடியா உளவு பார்த்ததாகவும், விசாரணை அமைப்புகளுக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உளவு வேலை கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் மணீஷ் சிசோடியா சிறையிலிருந்து வெளிவரக் கூடாது என விசாரணை அமைப்புகள் செய்யும் வேலையாகும். இந்தியாவின் பகுதிகளை கைப்பற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. ஆனால், விசாரணை அமைப்புகள் மணீஷ் சிசோடியா மீது பொய்யான வழக்குகளை பதிந்து வருகிறது என்றார்.
 

தில்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.