திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஜார்க்கண்டில் திருமண விழாவுக்குச் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

ஜார்க்கண்டின் குல்மா மாவட்டத்தில் திருமண விழாவுக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:54 pm

DIN

ஜார்க்கண்டின் குல்மா மாவட்டத்தில் திருமண விழாவுக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். 

தும்ரி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு திருமண விழாவிற்குச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கும்லா காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

விபத்தில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தாக்கும் சக்தியை கடவுள் அளிக்கட்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.