மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி, 8 பேர் காயம்! 

குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பாவகத் மலை அடிவாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் புதிதாகக் கட்டப்பட்ட வளைவு மேற்கூரையின் கற்கள் திடீரென இடிந்து விழுந்தததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

News image
Updated On :4 மே 2023, 11:27 am

DIN


குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பாவகத் மலை அடிவாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் புதிதாகக் கட்டப்பட்ட வளைவு மேற்கூரையின் கற்கள் திடீரென இடிந்து விழுந்தததில் ஒரு பெண் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில்,

பாவகத் மலையின் உச்சியில் காளி தேவியின் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

பாவகாட்டின் அடிவாரத்தில் கற்களால் கட்டப்பட்ட வளைவு போன்ற மேற்கூரை சமீபத்தில் கட்டப்பட்டது. அது பக்தர்களின் ஓய்வு அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்ததில் பெண்கள் உள்பட ஒன்பது பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் ஹலோல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வதோதராவுக்கு மாற்றப்பட்டனர். உயிரிழந்தவர் கங்காபென் தேவிபூஜக்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேற்கூரை கட்டட விபத்துக்கு சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். 

கடந்தாண்டு ஜூன் மாதம் பாவகத் மலையில் மேம்படுத்தப்பட்ட காளி மாதாவின் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.