உத்தரப் பிரதேச காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை குழு மீரட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கேங்ஸ்டார் அனில் துஜானா சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடப்பட்டு வந்த அனில் துஜானா மீது 62 வழக்குகள் உள்ள நிலையில் சிறப்புப் படையினரால் மீரட்டில் இன்று சுற்றி வளைக்கப்பட்டு, என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இவர் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.