2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வாக்குகளைப் பெற சிபிஐயும், அமலாக்கத்துறையும் பாஜகவுக்கு உதவாது: மம்தா

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் அடுத்த தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

News image
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
Updated On :5 மே 2023, 9:40 am

DIN

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் அடுத்த தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்ஷேர்கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் கூறுகையில், 

2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியுள்ளார். 

பாஜக தலைமையிலான மத்திய அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தும், முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் பெரும் பிரச்னையாக உள்ள கங்கை அரிப்புக்கு மாநில நிர்வாகம் எந்தவித உதவியும் செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 

அப்பகுதியில் ஆற்று அரிப்பால் நிலங்களை இழந்தவர்களுக்கு பானர்ஜி பட்டாக்களை(நிலப்பத்திரங்கள்) வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.