நாட்டில் புதிதாக 2,961 பேருக்கு கரோனா!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

முந்தைய நாளைவிட பாதிப்பு சற்று குறைந்துள்ளதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 30,041-ஆக குறைந்துள்ளது. 

நேற்று ஒரு நாளில் மட்டும் 17 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,659-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com