மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதிக்கு செல்கிறார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
கண்டி வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது,
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஒரு அதிகாரி உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் மேலும் அங்குள்ள நிலை குறித்து அறியவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஜோரி செல்கிறார்.