திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கர்நாடகத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுகிறார்கள்: பிரதமர் மோடி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:55 pm

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள் போட்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மக்கள் அவருக்கு வழிநெடுகிலும் அளித்த உற்சாக வரவேற்பு அவரை இவ்வாறு நினைக்கத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெங்களூருவில் மக்கள் காட்டும் அன்பு போன்று இதற்கு முன் நான் பார்த்ததில்லை. இன்று (மே 6) காலை பெங்களூருவில் சாலை வழிநெடுகிலும் மக்கள் எனக்கு வரவேற்பு அளித்ததை பார்க்க முடிந்தது. இதற்கு முன்  ஒருபோதும் நான் பார்த்திராத அளவுக்கு அவர்கள் என் மீது அன்பும், பாசமும் காட்டினார்கள். நான் பயணம் செய்த 25 கிலோமீட்டர் தூரமும் சாலைகளின் மூலை முடுக்குகளில் எல்லாம் மக்கள் வெள்ளம்போல் திரண்டிருந்தார்கள். மக்கள் அவர்கள் குடும்பத்துடனும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் அவர்களது குழந்தைகளுடன் வழிநெடுகிலும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நான் பெங்களூருவில் என்ன பார்த்தேன் என்றால், கர்நாடகத் தேர்தலில் மோடியோ, பாஜக தலைவர்களோ அல்லது எங்களது வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் மக்கள்தான் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் முழு பொறுப்பும் மக்கள் கையில் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். காங்கிரஸ் 85 சதவிகித கமிஷன் பெறும் கட்சி என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது. காங்கிரஸால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.