தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ம.பி. பேருந்து விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம்

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 மே 2023, 6:04 am

DIN

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் தசங்கா பகுதி அருகே உள்ள பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் 15 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000 நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.