/

ராஜஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி!

பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ராஜஸ்தான் செல்கிறார். 

News image
Updated On :9 மே 2023, 7:56 am

DIN

புது தில்லி: பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ராஜஸ்தான் செல்கிறார். 

தகவலின்படி, நாளை காலை 11 மணியளவில் மோடி நாத்வாராவில் உள்ள ஸ்ரீ)நாத்ஜி கோயிலுக்குச் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து, நாத்வாராவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்பு பிற்பகல் 3.15 மணியளவில் அபு சாலையில் உள்ள பிரம்மா குமாரிகளின் சாந்திவன் வளாகத்திற்குச் சென்று மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

மேலும், உதய்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.