இம்ரான் கான் கைது: இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கின் விசாரணைக்கு ஆஜரான இம்ரான் கானை நீதிமன்றத்திற்குள் நுழைந்து ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில், இம்ரான் கான் வலுகட்டாயமாக கைது செய்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், கைது நடவடிக்கையின் போது அவரது வழக்குரைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனிடையே இம்ரான் கானின் ஆதரவாளர்களின் போராட்டத்தைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com